Saturday 2 February 2013

சர்க்கரை நோய்- பரிசோதனை!


நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது இன்சுலின் குறைவதனால் ஏற்படுகிறது என்று அறிவோம்.
அதற்கு மாத்திரை வடிவிலும் ஊசி மருந்துகளின் வடிவிலும் சிகிச்சைகள் உள்ளன. சிலர் மாத்திரை மட்டும் சாப்பிட விரும்புவர். இன்சுலின் போடாமலேயே உணவுக் கட்டுப்பாட்டிலேயே நான் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வேன் என்றும் கூறுவார்கள்.
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் போட்டுக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே அவர்கள் மாத்திரை மட்டும் போதும் என்று மருத்துவரிடம் வாதாடுவார்கள்.
 டாக்டர் இன்சுலின் போடச் சொன்னார் ஆனால் நான் மாத்திரையில் அரை மாத்திரை கூட்டி சாப்பிட்டேன் இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எதன் அடிப்படையில் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை ரத்த்த்தில் சர்க்கரையின் அளவைப் பொறுத்ததா?
 என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
நீரிழிவு நோயாளியின் கணையம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அதை வைத்துதான் நோயின் தீவிரம் அறியப் பட்டு அதற்கான சிகிச்சையும் தீர்மானிக்கப்படுகிறது.
மாத்திரை மருந்துகளின் அளவை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ முன் கணையம் எப்படி வேலை செய்கிறது, இன்சுலின் எவ்வளவு சுரக்கிறது என்று அறிந்து கொள்வதே சிறந்தது.

முதலில்
1.இன்சுலின் சுரப்பு இருக்கிறதா? இல்லையா?
2.குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா?
என்று  தெரிய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக இதைத் தெரிந்து கொள்ளும் பரிசோதனைகளில் ஒன்று சி-பெப்டைட் பரிசோதனை. இந்த சி-பெப்டைடானது ரத்த்த்தில் இன்சுலின் எவ்வளவு உள்ளதோ அதே அளவுதான் இந்த சி-பெப்டைடும் இருக்கும். பெரும்பாலும் சர்க்கரைக்கான இரத்தப் பரிசோதனைகளில் இதுவும் இருக்கும்.
1.சி பெப்டைட் உதவியுடன் நாம் நீரிழிவு நோய் முதல் வகையா அல்லது இரண்டாவது வகையா என்பதனை அறியலாம்.
2.நோயாளிகளின் சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதற்கான காரணம் அறிய.

நீரிழிவு நோய் முதல் வகையில் கணையம் இன்சுலினை சுரக்காது. அந்த நோயாளிகளில் சி.பெப்டைடு அளவு இரத்தத்தில் மிகக்குறைவாக இருக்கும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயில் சி.பெப்டைட் அளவு சரியாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.


Thursday 17 January 2013

சர்க்கரை நோயாளிகள் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால்?


சர்க்கரை நோயாளிகள் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால்?

அன்பு நண்பர்களே! சர்க்கரை வியாதி என்று பொதுவாக அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
உள்ளூரில் வேலை பார்த்துக் கொண்டு வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களே உணவுக்கட்டுப்பாட்டை முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை எனும் போது ஊர் ஊராக அலையும் வேலையில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் என்ன சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது, சர்க்கரை ஏறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
ஒரு நாள் போய் விட்டு திரும்பி வந்து விடுபவர்கள் என்றால் வீட்டிலிருந்து கொண்டு செல்ல்லாம். அப்படி இல்லாமல் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள் என்றால் என்ன செய்வது? மேற்கண்ட நபர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர கீழ்க்கண்ட வழிகளைக் கடைப் பிடிக்கலாம்.
இந்த குறிப்புகளைக் கடைப்பிடிப்பது சற்று சிரமம்தான், இருந்தாலும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கலாம்.
முதலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்:
1.பிரியாணி
2.பூரி
3.புரோட்டா
4.ரோஸ்ட்
5.பொங்கல்
6.வடை
7.சேவை
போன்ற உணவுகள் அதிக கலோரி உள்ளவை என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.
முழு சாப்பாடு, அன்லிமிடெட் மீல்ஸ் போன்றவை வாங்காமல் கொஞ்சம் சாதம் வாங்கி அதில் கூட்டு போன்ற காய்கறிகளை சரிக்கு சம்மாகக் கலந்து சாப்பிடலாம்.
கறி,கோழி போன்ற அசைவம் சாப்பிட நேர்ந்தால் சாதத்தை குறைத்துக் கொள்ளவும்.
சைவ உணவுகளில் சில்லி கோபி, சில்லி காளான் போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
மேலே சொன்னவை தவிர்க்க வேண்டியவை!
ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தால் என்னென்ன சாப்பிடலாம்.
1.தயிர் சாதம்
2.சப்பாத்தி
3.சாலட்
4.கொட்டை வகைகள்
5.இட்லி,
6.எண்ணெய் குறைந்த தோசை
7.சப்பாத்தி
8.இடியாப்பம்
8.காய்கறி சாலட்
9.பழ சாலட், ப்ப்பாளி அதிகம் சேர்ந்த்து.
8.ஒரு ஆப்பிள்
9.வெள்ளரிக்காய்
இந்தச் சின்னச் சின்ன குறிப்புகளைக் கடைப்பிடித்தால் சர்க்கரையின் அளவு குறைவது உறுதி.
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory